×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி மாணவர்கள் அபார சாதனை

புதுக்கோட்டை, மே 8: பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவி மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் மாணவர்கள் 100 சதவிகித விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ஈஸ்வரி 593 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்துள்ளார். மாணவியைத் தொடர்ந்து ரேஷ்மா சித்திகா பள்ளியில் இரண்டாம் இடத்தையும், மாணவி சுகன்யா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 26 மாணவர்களும், 500 மதிப்பெண்ணிற்கு மேல் 106 மாணவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை மௌண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜெ.ஜோனத்தன் ஜெயபரதன், பள்ளியின் துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் பாராட்டினார்கள். மேலும் பள்ளியின் கல்வி முதல்வர் குமரேஷ், பள்ளியின் நிர்வாக முதல்வர் கிருபாஜெபராஜ் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி தங்கள் வாழ்த்தினை தெரிவித்தார்கள்.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பள்ளி மாணவர்கள் அபார சாதனை appeared first on Dinakaran.

Tags : Pudukottai Mount Zion School ,Pudukottai ,Pudukottai Mount Zion Matriculation Higher Secondary School ,Pudukottai Mt Zion School ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!